shadow

ஐ.எஸ்.எல் முதல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்திய கேரள

இந்தியன் சூப்பர் லீக் என்று கூறப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில், முதல்நாளான நேற்று கேரள அணி கொல்கத்தாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

இந்த தொடரில் சென்னை எப்.சி உட்பட 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் நேற்று நடந்தத முதல் ஆட்டத்தில் கேரளாவும், கொல்கத்தாவும் மோதின. இந்த ஆட்டத்தின் முதல்பாதி சுற்று முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இடைவெளி முடிந்து மீண்டும் துவங்கிய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேரள அணி 2 கோல்களை அடித்தது. நேரம் முடிவடைய இருந்த சூழலில் கோல் எதுவும் அடிக்க முடியாமல் கொல்கத்தா திணற, 2-0 என்ற கோல் கணக்கில் கேரள அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்று பெங்களுரு எப்.சி மற்றும் சென்னை எப்.சி ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது

Leave a Reply