shadow

வங்கதேச இந்து கோவிலின் பூசாரியை கொன்றது நாங்கள்தான். ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு
isisi
வங்காள தேசத்தில் இந்து கோவிலில் பூஜை செய்யும் பூசாரி ஒருவரை நேற்று மர்ம நபர்கள் கொலை செய்த செய்தி வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த பூசாரியை திட்டம் போட்டு கொலை செய்தது நாங்கள்தான் என ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். இதனால் வங்கதேசத்தில் வாழும் இந்துக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வங்க தேசத்தில் இந்திய எல்லையில் அமைந்துள்ள இந்து கோவில் ஒன்றின் தலைமை பூசாரியாக இருந்தவர் 50 வயது ஜக்னேஸ்வரர் ராய். இவரை நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் கொலை செய்து தலையையும் துண்டித்தனர்.

இந்த கொலை குறித்து வங்கதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த கொலைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து தீவிரவாதிகளின் இணையதளத்தில், கோவில் பூசாரியை கொலை செய்தது நாங்கள்தான்  என ஐ.எஸ். அமைப்பினர் பதிவு செய்துள்ளனர்.

அரேபிய மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்த தகவலின் அடிப்படையில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் வேறொரு தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply