டெல்லியில் பணிபுரியும் அயர்லாந்து நாட்டு பெண் தூதரக அதிகாரி மிஸ்டு கால்கள் கொடுத்து தொந்தரவு செய்த இந்திய அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அயர்லாந்து நாட்டின் மூத்த பெண் அதிகாரி ஒருவர் டெல்லியில் உள்ள தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு எண்களில் இருந்து அடிக்கடி மிஸ்டு கால்கள் வந்துகொண்டிருந்தது. அந்த நம்பர்களுக்கு அவர் மீண்டும் தொடர்பு கொண்டால், சுவிட்ச் ஆப் என்று வந்தது. எனவே சந்தேகம் அடைந்த அந்த பெண் அதிகாரி, தனது கணவருடன் சென்று டெல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீஸார் பெண் தூதரின் செல்போனுக்கு வந்த எண்களை குறித்துவைத்துக்கொண்டு, தொடர்ந்து அவரது செல்போனுக்கு வரும் அழைப்புகளை கண்காணித்தனர். இதில் அதே அலுவலகத்தில் பணிபுரியும் உமேஷ் என்பவர்தான் தன் மேலதிகாரிக்கு அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து தொந்தரவு செய்வது தெரியவந்தது. உடனே உமேஷை கைது செய்த டெல்லி போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Leave a Reply