36 பேர்களுக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை. ஈராக் அரசு அதிரடி
ஈராக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு தெஹ்ரிக் என்ற பகுதியில் ஈராக் ராணுவத்தினர்கள் சுமார் 1700 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். பின்னர் அவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலை செய்ததாகவும் இந்த கொடுஞ்செயலுக்கு ‘ஸ்பெய்செர்’ படுகொலை என அழைக்கப்பட்டதாகவும் அதிர்ச்சி செய்தி வெளிவந்தது.
இது குறித்து ஈராக் அரசு விசாரணை நடத்தி வந்த போது இந்த கொடுமையான செயலை செய்த தீவிரவாதிகள் ஒருசிலரை கண்டுபிடித்து கைது செய்தது. அவர்களில் 36 பேருக்கு ஈராக் அரசு இன்று மரணதண்டனை வழங்கியது. இந்த தகவலை நசிரியாஹ் மாகாணத்தின் தலைநகர் திஹர் கவர்னர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஈராக் அதிபரின் உத்தரவையடுத்து இவர்கள் அனைவரும் கடந்த வாரம் நசிரியாஹ் மாகாணத்திற்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.