ஏப்ரல் மாதம் வரை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை: கொரோனாவால் அதிரடி அறிவிப்பு

சீனாவை அடுத்து ஈரான் மற்றும் இத்தாலியில் கொரோனா வைரசினால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 50 பேரும் ஈரானில் 49 பேரும் என இந்த இரண்டு நாடுகளில் இருந்து மட்டும் 99 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா மேலும் பரவாமல் இருக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்தாலியில் மூன்று நகரங்களும் ஈரானில் இரண்டு நகரங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈரானில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஏப்ரல் மாதம் வரை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலியிலும் விரைவில் இதேபோன்ற ஒரு அறிவிப்பு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply