கணவரிடம் இருந்து கமிஷனர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மனைவி! ஒரு சுவாரஸ்ய சம்பவம்
பொதுவாக காவல்துறை அதிகாரிகள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றப்பட்டால் புதிய அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கும். அந்த வகையில் கொச்சி கமிஷனர் மாற்றலாகியபோது தனது பொறுப்பை தனது மனைவியிடம் ஒப்படைத்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கொல்லம் கமிஷனராக பணியாற்றிய சதீஷ் பினோ என்பவர் சமீபத்தில் பத்தினம்திட்டை மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டார். அவருடைய பதவிக்கு அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியுமான அஜிதா பேகம் நியமனம் செய்யப்பட்டதால் மனைவியிடமே கமிஷனர் பொறுப்பை ஒப்படைக்கும் நிலை சதிஷ் பினோவுக்கு ஏற்பட்டது.
மூன்றாவது குழந்தைக்காக பிரசவ விடுமுறைக்கு சென்றிருந்த அஜிதா பேகம் மீண்டும் பணிக்கு திரும்பி கணவரிடம் இருந்து கமிஷனர் பொறுப்பை பெற்ற இந்த நிகழ்வு ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.