shadow

ipl 7

அபுதாபி நாட்டில் தீபிகா படுகோனே, மாதுரி தீட்சித் ஆகிய பாலிவுட் நடிகைகளின் குத்தாட்டத்துடன் இன்று ஐ.பி.எல். திருவிழா தொடங்குகிறது.

7வது ஐ.,பி.எல் போட்டிகள் நாளை முதல் நடக்க இருப்பதால் இன்று அபுதாபியில் தொடக்கவிழா பிரமாண்டமாக நடக்கவுள்ளது. இந்தியாவில் தேர்தல் நடந்துகொண்டிருப்பதால், பாதுகாப்பு காரணம் கருதி 7வது ஐ.பி.எல் போட்டிகள் அபுதாபி, வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் நடத்த ஐ.பி.எல் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.

அதன்படி இன்று தொடக்கவிழா தொடங்கி, அதன்பின் நாளைமுதல் போட்டிகள் ஆரம்பமாக உள்ளது. அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய மூன்று நாடுகளில் நாளை 16ஆம் தேதி முதல் வரும் 30ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகின்றது.

இன்று இரவு அபுதாபியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமாக நடக்க உள்ள  இரவு விருந்து நிகழ்ச்சியில் இந்தி நடிகைகள் மாதுரி தீட்சித், தீபிகா படுகோனே ஆகியோர் இந்தி பாடல்களுக்கு நடனமாட இருக்கின்றனர். இவர்களுடன் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மற்றும் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ஷில்பா ஷெட்டி ஆகியோர்களும் நடனம் ஆடுகின்றனர்.

Leave a Reply