shadow

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐடி ஊழியர்கள்

கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்திற்கு பல்வேறு துறையினர் ஆதரவு கொடுத்து போராட்டத்தை வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றிக்கு குறிப்பிட்ட ஒரு நபரையோ அல்லது ஒரு துறையையோ சொல்ல முடியாத அளவிற்கு அனைத்து துறையினர்களின் பங்கும் இருந்தது. குறிப்பாக எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத ஐடி துறையினர்களும் மிகுந்த ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அதே ஐடி துறையினர் நெடுவாசல் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஆதரவு தெரிவித்தது போலவே, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை, சிறுசேரி சிப்காட் வளாக நுழைவாயில் அருகே 100 பேர் வரிசையாக பதாகைகள் ஏந்திய வண்ணம் அமைதியாக அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸார் கேட்டுக்கொண்டதன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.

Leave a Reply