இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முடிந்த ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மீண்டும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. நேற்று இந்தியா தனது இரண்டவது இன்னிங்ஸில் வெறும் 94 ரன்களில் ஆட்டமிழந்து கேவலமான தோல்வியை பெற்றுள்ளது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, இந்தியாவை 148 ரன்களுக்குள் சுருட்டியது. பின்னர் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யத்தொடங்கிய இங்கிலாந்து அணி 486 ரன்கள் குவித்தது. இதனால் முதல் இன்னிங்சில் 338 ரன்கள் பின்தங்கியிருந்த இந்திய அணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 94 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய அணியின் ஏழு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் தங்கள்விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.கேப்டன் தோனி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி 1-3 என்ற விகிதத்தில் தொடரை இழந்தது. சதமடித்து மிக அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணியின் ரூட் சிறந்த ஆட்டகாரராகவும், ஆண்டர்சன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
அடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. இதன் முதலாவது ஆட்டம் வருகிற 25–ந்தேதி பிரிஸ்டலில் நடக்கிறது
Leave a Reply
You must be logged in to post a comment.