கைதட்டலால் அதிர்ந்தது இந்தியா: இந்த ஒற்றுமை போதும் கொரோனாவை விரட்ட…
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வந்து கைதட்டி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில் இன்று மாலை சரியாக 5 மணிக்கு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே வந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கைதட்டி நன்றி தெரிவித்தார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தன்னலமற்று பணியாற்றுவோர்களுக்கு கைதட்டி மக்கள் பாராட்டி வருவது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.