shadow

இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கன மழை என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்னும் ஒரு மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடல் மற்றும் வங்க கடல் ஆகிய பகுதிகளில் இரண்டு காற்றழுத்த தாழ்வு ஒரே நேரத்தில் தோன்றியுள்ளதால் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.