இங்கிலாந்தில் இந்திய தூதரை வெறுப்பேற்றிய விஜய் மல்லையா. பெரும் பரபரப்பு
இந்திய வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு அந்த கடனை கட்டாமல் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவை வெறுப்பேற்றும் வகையில் இந்திய தூதர் கலந்து கொண்ட ஒரு விழாவில் மகளுடன் கலந்து கொண்டார். இதனால் அதிருப்தி அடைந்த இந்திய தூதர் நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுஹெல் சேத் மற்றும் பத்திரிகை நிருபர் சன்னி சென் ஆகியோரின் நூல் வெளியீட்டு விழா லண்டன் ஸ்கூல் ஆப் இகானமிக்சில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அழையா விருந்தாளியாக விஜய் மல்லையா தனது மகளுடன் கலந்து கொண்டார்.
விஜய் மல்லையா இந்த விழாவில் கலந்து கொண்டதை அறிந்தவுடன் விழாவின் பாதியிலேயே இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா திடீரென எழுந்து வெளியேறினார். இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.