shadow

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தானை எல்லை தாண்டி தாக்கிய இந்திய வீரர்கள்

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஏற்கனவே போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தானுக்கு பாடம் புகுத்தும் வகையில் இந்திய வீரர்கள் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சனிக்கிழமை இந்திய நிலைகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதற்கு பதிலடியாக, நேற்று, இரவு ராவ்லாகோட் செக்டார் பகுதியில் உள்ள ராக்சிக்ரி அருகே எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிச் சென்று பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் படுகாயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த செய்தியை இந்திய ராணுவ உளவுப்பிரிவும் இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply