இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 3 நாடுகளுக்கு இடையிலான டி20 முத்தரப்பு தொடர் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் சுற்று முடிந்து இரண்டாவது சுற்று நேற்று ஆரம்பமான நிலையில் நேற்று இந்தியா-இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.. மேலும் நேற்று ஆட்டம் தொடங்கும் முன்பே மழை குறுக்கிட்டதால் 19 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது,
இந்த நிலையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்தது.
இதனால் வெற்றி பெற 153 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
4 விக்கெட்டுக்களை வீழ்த்திய தாகுர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபப்ட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.