shadow

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட். இந்தியா அபார வெற்றி
Faf du Plessis
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 215 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 79 ரன்களில் ஆட்டம் இழந்தது.

இதனால் முதல் இன்னிங்சில் 136 ரன்கள் அதிகம் இருந்த இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 173 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற 310 ரன்கள் இலக்காக இருந்தது. ஆனால் இந்திய அணியின் அபாரமான சுழற்பந்து வீச்சு காரணமாக தென்னாப்பிரிக்க அணி 185 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 124 ரன்களில் வெற்றி பெற்றது.

இதனால் இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது. இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 3ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.

Leave a Reply