20 ஓவர் தொடரை முழுதாக வென்றது இந்திய அணி.சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பரிதாபம்
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரை 1–4 என்ற கணக்கில் இழந்தாலும், 20 ஓவர் போட்டி தொடரில் 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று மூன்றாவது போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. வாட்சனின் அபார சதத்தால் அந்த அணி 20 ஓவர்கள்ளில் 197 ரன்கள் குவித்தது.
198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா 52 ரன்களும், விராத் கோஹ்லி 50 ரன்களும் ரெய்னா 49 ரன்களும் குவித்தனர். கடைசி ஓவரில் வெற்றி பெற 17 ரன்கள் தேவை என்ற நிலையில் யுவராஜ்சிங் அதிரடியாக ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது. 1224 ரன்கள் குவித்த வாட்ஸன் ஆட்ட நாயகனாகவும், விராத்கோஹ்லி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.தொடரை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.