இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட். வலுவான நிலையில் இங்கிலாந்து
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று மும்பையில்தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.
நேற்றைய ஆட்டமுடிவின்போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஜென்னிங்ஸ் 112 ரன்களும், எம்.எம்.அலி 50 ரன்களும், குக் 46 ரன்களும் எடுத்தனர்.
இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுக்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.