shadow

தர்மசாலா டெஸ்ட்: இந்திய அணியின் நிதான ஆட்டம்.

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தற்போது தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் நேற்று இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது

இந்நிலையில் நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி நிதானமாக ஆடி 6 விக்கெட்டுக்களை இழந்து 248 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி தற்போது 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களான ராகுல் 60 ரன்களும், புஜாரா 57 ரன்களும், கேப்டன் ரஹானே 46 ரன்களும் எடுத்துள்ளனர். இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

Leave a Reply