தர்மசாலா டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு ஆல்-அவுட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நேற்று தர்மசாலாவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது
இந்திய அணி பவுலர்களின் பந்துகளை ஆரம்பத்தில் அடித்து நொறுக்கியது ஆஸ்திரேலிய அணி. கேப்டன் ஸ்மித் 111 ரன்களும், வார்னர் 56 ரன்களும் குவித்தனர். இந்நிலையில் குல்தீவ் யாதவ் உள்பட இந்தியர்களின் அபார பந்துவீச்சி காரணமாக அடுத்தடுத்து ஆஸ்திரேலிய விக்கெட்டுக்கள் வீழ்ந்தன. அந்த அணி 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. குல்தீப் யாத 4 விக்கெட்டுக்களையும், யாதவ் இரண்டு விக்கெட்டுக்களையும், குமார், அஸ்வின் மற்றும் ஜடேஜ தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்
இதன்பின்னர் ஒரே ஒரு ஓவர் மட்டும் விளையாடிய இந்திய ரன் ஏதும் எடுக்காமலும், விக்கெட் இழக்காமலும் உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.