shadow

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்: ஜூன் 23ல் முதல் போட்டி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் பெற்ற தோல்வியையே இன்னும் கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத நிலையில் வரும் 23ஆம் தேதி முதல் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.

ஜூன் 23, 25, 30 ஜூலை 2, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணி மனரீதியாக சோர்வடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தொடரிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய அணியே விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணியில் ஜேசன் ஹோல்டர் தலைமையில் ஜொனாத்தன், அல்ஜாரி, ஜேசன் முகம்மது, பொவல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர்.

Leave a Reply