shadow

27 ரன்களில் மலேசியாவை சுருட்டிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

மகளிருக்கான ஆசிய கோப்பை போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றைய ஆட்டம் ஒன்றில் இந்திய மற்றும் மலேசிய அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி, மலேசிய அணியை 142 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 169 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்ட வீராங்கனை மிதிலிராஜ் 97 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மலேசியா அணி இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 27 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

Leave a Reply