shadow

உத்தரகாண்ட் எல்லை கிராம மக்களால் சீனாவின் ஊடுருவல் அதிகரிப்பு. தருண் விஜய் எச்சரிக்கை

utterghandஉத்தரகண்ட்-சீன எல்லையில் உள்ள கிராமமக்கள் அடிப்படை கட்டமைப்பு, வேலை வாய்ப்பு போன்ற வசதிகள் இல்லாததால் கூட்டம் கூட்டமாக கிராமத்தை விட்டு வெளியேறி வேறு இடங்களில் குடிபெயர்வதால், அந்த பகுதிகளில் சீனாவின் ராணுவம் ஊடுருவி வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதியும், உள்கட்டமைப்பும் செய்து தர வேண்டியது மிகவும் அவசியம் என்றும் பா.ஜ.க. பிரமுகர் தருண் விஜய் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் அளித்த பேட்டியில், ‘உத்தரகாண்டின் தொலைதூர எல்லைப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேலைவாய்ப்பு தேடி இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்தப் போக்கினைத் தடுத்த நிறுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகள் ஆகியவை செய்து கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.

உத்தரகாண்டில் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள எல்லைப்புற கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதால் மனித நடமாட்டம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இது நமது எதிரி நாடான சீனாவுக்கு விடுக்கப்படும் வெளிப்படையான அழைப்பாகி விடும். எனவே எல்லைப் பகுதிகளில், குறிப்பாக இமயமலைப் பகுதிகளில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.

கிராமவாசிகள் இடம் பெயர்ந்ததால், சமோலி மாவட்டத்தின் பாரா ஹோதி, பிதோராகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சி மற்றும் மிலாம் பனிமலைப் பகுதிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நான் முன்ஷியாரி முதல் மிலாம் பகுதி வரை சுமார் 105 கி.மீ. தூரத்துக்கு மலையேறிச் சென்று பார்த்தேன். அந்தப் பகுதிகள் எல்லாம் ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.

அரிய வகை மான்களுக்காகவும், போஜ்பாத்ரா வனத்துக்காகவும் உலகப் புகழ் பெற்ற இப்பகுதியில் தற்போது ஒருசில குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இதனால் வேட்டைக்காரர்களுக்கு எந்தத் தடையுமின்றி விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாட நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply