வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கிய கோடிக்கணக்கான ரூபாயும் கிலோ கணக்கில் தங்கமும்
சென்னை உள்பட தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர்களின் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் கிலோகணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் சென்னையில் அரசு ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலகத்தில் 2வது நாளாக வருமானவரி சோதனை நடந்து வருகிறது
சென்னை உட்பட 30 இடங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.160 கோடி, 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அருப்புக்கோட்டையில் நடைபெறும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.