முன்னாள் திமுக எம்பி, ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை.
தி.மு.க.,வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட 40 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னர் செல்போன், ஸ்கூட்டி ஆகிய இலவச பொருட்களை வழங்குவதற்காக நிதியை பெருக்கும் வகையில் வரி ஏய்ப்பு செய்தோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்ததன் எதிரொலியாக தி.மு.க.,வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெகத்ரட்சனுக்கு அடையாறு, நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகளிலும், தி.நகரில் அலுவலகமும் உள்ளது. மேலும் சொந்தமான மதுபான ஆலைகள், மருத்துவ கல்லூரி உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளது. அவருக்கு சொந்தமான 40 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.