சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் வைரஸ்

தமிழகத்தில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டவர்களை கொரோனா வைரஸ் பாதித்து வரும் நிலையில் நேற்றும் 1600 க்கும் மேற்பட்டவர்களை பாதித்து உள்ளது என்பதும் சென்னையில் மட்டும் 1100க்கும் அதிகமானவர்களை கொரோனா பாதித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களை முடக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியானது

இதனை அடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என்பது வதந்தியே என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஒழுக்கம் என்பது வதந்தி என்பது உறுதியாகி உள்ளது

Leave a Reply