shadow

 9 இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரை உள்ள பாக்ஜலசந்தி கடற்பகுதியை கயாக் என்ற படகு மூலம் யாருடைய உதவியும் இன்றி தனியாக கடந்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்ஆஸ்திரேலியாவைச் சார்ந்த சாண்ட்ரா ஹேலன் ராப்சன் என்ற பெண்மணி.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சாண்ட்ரா ஹேலன் ராப்சன் என்றா 45 வயது பெண். கடல்பகுதி வழியாக தனது கயாக் படகின் உதவியோடு  உலகம் முழுவதையும் சுற்றி வருகிறார். கடந்த 2011 மே மாதம் ஜெர்மனியில் இருந்து  கயாக் படகு மூலம் தனது பயணத்தை ஆரம்பித்ஹ்ட சாண்ட்ரா,இதுவரை பல்வேறு நாடுகளைக் கடந்து தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவிற்கு வரும் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்றடைய திட்டமிட்டுள்ளார்.

9aதனுஷ்கோடி கடற்பகுதியை கடக்க அவருக்கு இந்தியா மற்றும் இலங்கை அரசு அனுமதி கொடுத்தது. இதையடுத்து அவர் நேற்று முன் தினம் காலை 6.45 மணிக்கு இலங்கை தலைமன்னாரில் இருந்து புறப்பட்டு,மாலை 4.15 மணியளவில் தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராமர் கோவிலை வந்தடைந்தார்.

பாக்ஜலசந்தி கடல்பகுதியை கயாக் படகு மூலம் கடந்த முதல் பெண்மணி என்ற சாதனையை நேற்று ஹெலன் ராப்சன் படைத்து சாதனை புரிந்தார்.

தனது சாதனை குறித்து செய்தியாளர்களிடம் ஹேலன் ராப்சன் கூறும்போது, “எனது பயணத் திட்டத்தில் பாதி தூரத்தை கடந்து விட்டேன். மீதமுள்ள 23 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை பங்களாதேஷ் மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை கடந்து செப்டம்பர் 2016-க்குள் எனது தாய்நாடான ஆஸ்திரேலியா சென்றடைந்து விடுவேன். மேலும் பாக்ஜலசந்தி கடற்பரப்பை கயாக் படகு மூலம் கடந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.

Leave a Reply