இம்ரான்கானுக்கு தெரிந்தது போதை, செக்ஸ் மட்டுமே: முன்னாள் மனைவி குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டில் இம்ரான்கான் கட்சி ஆட்சியை பிடித்து அவர் பாகிஸ்தானின் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய முன்னாள் மனைவிகளில் ஒருவர் ரெஹம்கான் தன்னுடைய சுயசரிதையில், ‘இம்ரான்கானுக்கு தெரிந்தது எல்லாம் செக்ஸ், போதை மருந்து பழக்கம் மட்டுமே என்றும், குடும்பத்தையே பராமரிக்க தெரியாத இம்ரான் கான், நாட்டை எப்படி பராமரிப்பார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது சுயசரிதையில் கூறியதாவது: இம்ரான்கானுக்கு தெரிந்தது எல்லாம் செக்ஸ், போதை மருந்து பழக்கம், நடனம் ஆடுவது போன்றவை மட்டுமே. முறைகேடான செக்ஸ் உறவில் அதிகம் விருப்பம் கொண்ட நபர் இம்ரான் கான்.
குடும்பத்தையே பராமரிக்க தெரியாத இம்ரான் கான், அரசியல் கட்சி தொடங்கி சிரமப்பட்டபோது, நான் சில ஆலோசனைகள் தந்து உதவினேன். பல தனிப்பட்ட வழக்கு விசயங்களையும் சந்திக்கவும் நேரிட்டது.
முறையாக திருமணம் செய்யும் முன்பாகவே முறைகேடான வழியில் இம்ரான் கானுக்கு 5 குழந்தைகள் பிறந்துள்ளன. இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அவரோடு முறைகேடான உறவு வைத்திருந்த பெண்களில் சிலர் இந்தியாவை சேர்ந்தவர்.
ஒருவர் கூட பகிரங்கமாக இந்த உண்மையை வெளிப்படுத்த விரும்பவில்லை,
இவ்வாறு ரெஹம்கான் தனது சுயசரிதை புத்தகத்தில் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.