ராஜீவ் காந்தியை அடுத்து மோடி? மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்ய சதியா?
மனித வெடிகுண்டு மூலம் ஏற்கனவே ராஜீவ் காந்தி என்ற இளம் பிரதமரை இந்தியா இழந்துள்ள நிலையில் அதே மனித வெடிகுண்டு மூலம் தற்போதைய பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை பீகார் மாநில தலைநகர் பாட்னா மற்றும் முஸாபர் நகரில் நடைபெறும் இரண்டு பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார். பீகாரில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பிரதமரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மோடியை பாட்னா அல்லது முஸாபர்பூர் பயணத்தின் போது மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை, பீகார் மாநில போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு குழுவினரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை பெண் மனிதவெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்ததை போலவே நன்கு பயிற்சி பெற்ற பெண் மாவோயிஸ்ட் மூலம் பிரதமர் மோடியை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால் பிரதமரின் பயணம் மற்றும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், செய்தியாளர், போலீஸ் அதிகாரி, எலக்ட்ரீசியன், தொழிலாளர் வேடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.