shadow

இந்திய பெண்களுக்காக உழைக்க விருப்பம்: மலாலா

பாகிஸ்தானில் உள்ள பெண்கள் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்து வரும் நோபல் பரிசு பெற்ற மலாலா, இந்திய பெண்களுக்காகவும் உழைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்

இந்தியர்கள் தன் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதாகாவும், இந்திய பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுபட விரும்புவதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மலாலா தெரிவித்துள்ளார்

இந்திய கலாச்சாரங்கள் குறித்து மேலும் அறிந்து கொண்டு வருவதாகவும், இந்திய திரைப்படங்கள் தன்னை மிகவும் கவர்ந்தவை என்று கூறிய மலாலா, இந்திய சிறுமி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று தன்னை நெகிழ வைத்ததாகவும், அந்த கடிதத்தில் நாள் நாம் இருவரும் நமது தேசங்களின் பிரதமர்களாவோம். அப்போது நாம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி இருநாடுகளுக்கு இடையே அமைதியை கொண்டு வருவோம்” என எழுதி இருந்ததாகவும் தெரிவித்தார்.

Leave a Reply