shadow

நானும் மெரிட்டில்தான் படித்தேன்: அன்புமணிக்கு தமிழிசை பதில்

கடந்த சில நாட்களாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திராஜனுக்கும், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிக்கும் யார் புத்திசாலி என்ற கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேசிய அன்புமணி, ‘நான் மெரிட்டில் டாக்டர் பட்டம் படித்தேன். ஆனால் தமிழிசை எம்ஜிஆர் ரெகமெண்டேஷனில் டாக்டர் சீட் வாங்கி படித்தார் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழிசை, ‘நானும் மெரிட்டில்தான் எம்பிபிஎஸ் படித்தேன். யாருடைய பரிந்துரையிலும் நான் படிக்கவில்லை. அதேபோல் 20 ஆண்டுகால கடின உழைப்பு, அறிவாற்றல், தேசிய பண்பு இருப்பதால் தான் தேசியக் கட்சியின் தலைவராக வந்திருக்கிறேன். தகுதியில்லாமல் வரவில்லை. அரசியல்வாதியின் மகளாக இருந்தபோதும் அந்த நிழலில் தலைவராக வரவில்லை. சுய உழைப்பில் தலைவராக வந்திருக்கிறேன். என்று கூறியுள்ளார்.

இருதலைவர்களும் குழந்தைகள் போல் வாக்குவாதம் செய்து வருவதை பிற கட்சியினர்களும், மக்களும் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

 

 

Leave a Reply