shadow

வைகோவின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பிரேமலதா

premalathaமக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தது தவறு என்றும், தேமுதிக மற்றும் தமாகவை இந்த கூட்டணியில் இணைத்ததால்தான் தங்கள் கூட்டணி தோல்வி அடைய நேரிட்டது என்றும் சமீபத்தில் வைகோ கூறியிருந்தார்.

வைகோவின் இந்த கருத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது:

தேமுதிகவுக்கு ஆதரவு இல்லை என்று மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியிருக்கிறார். மேலும், முதல்வராக விஜயகாந்தை முன்னிறுத்தியது தவறு என்று அவர் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவர் உணர்ச்சி வசப்படக்கூடிய குணம் உள்ளவர். தினமும் ஒரு கருத்துச் சொல்வார். அவர் சொல்கிற கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தேமுதிகவுடன் கூட்டணி வேண்டும் என்று தேடி வந்தவரும் அவரே. இப்போது விமர்சனங்களை வைப்பதும் அவரே. இதற்கு அவரே பதில் சொல்வார்’ என்று கூறினார்.

Leave a Reply