shadow

11கலைஞர் டிவி’ திமுக கட்சிக்கு சொந்தமானது அல்ல. அதன் பங்குதாரர்கள் யார் யார் என்று தனக்கு வழக்கு ஆரம்பிக்கும் வரை தெரியாது என்று டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வாக்குமூலம் கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவிடம் சிபிஐ குறுக்கு விசாரணை செய்தது. புதுடெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவின்பேரில் நடந்த இந்த குறுக்கு விசாரணையில் சிபிஐ வழக்குரைஞர் யு.யு.லலித் ஆ.ராசாவிடம் கேள்விகளை கேட்டுகுறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

விசாரணையில் ஆ.ராசா கூறிய பதில்கள் பின்வருமாறு:

கலைஞர் டிவியை ஒரு பார்வையாளர் என்ற முறையில் மட்டுமே எனக்கு தெரியும். கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சி திமுக திமுக என்ற கட்சிக்கு சொந்தமானது இல்லை. கலைஞர் தொலைக்காட்சியை தொடங்கி வைத்தது யாரென்றே எனக்குத் தெரியாது. அதன் நிர்வாகிகள் மற்றும் பங்குதாரர்கள் யார் என்பது எனக்கு சுத்தமாக தெரியாது. கனிமொழிக்கும், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும் கலைஞர் டிவியில் பங்கு இருப்பதை நான் 2ஜி வழக்கு ஆரம்பித்த பின்னர்தான் தெரிந்துகொண்டேன்.

Leave a Reply