ஷங்கர் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ‘ஐ’ திரைப்படம் இந்தியாவில் இதுவரை ஏற்படுத்தாத சாதனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ படத்தின் ஒரு நிமிட டீசரை பார்த்துவிட்டு இந்திய திரையுலகினர் மட்டுமின்றி ஹாலிவுட் திரையுலகமும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்திய திரையுலகமே ‘ஐ’ படத்திற்கு முன், ‘ஐ’ படத்திற்கு பின் என இருவகையாக பிரிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் டீஸரை பார்த்டுவிட்டு பிரபல ஹாலிவுட் பட நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. இப்படி ஒரு பிரமாண்டமான திரைப்படத்தை நாங்கள் தயாரித்திருந்தால் கண்டிப்பாக ரூ.5000 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிடுவோம் என சமீபத்தில் தெரிவித்துள்ளது.
ஐ படத்தின் பெரும்பாலான படபிடிப்புகள் சீனாவில் நடைபெற்றுள்ளதால், சீனாவில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய அந்நாட்டிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக சுமார் 10,000 பேர் இரண்டரை ஆண்டுகாலமாக கடினமாக உழைத்துள்ளனர்.
கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள 60% பேர் இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்க முடிவு செய்துவிட்டதாக ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. படத்தின் ரிலீசை இந்தியா மட்டுமின்றி உலகமே ஒரு எதிர்பார்ப்புடன் உள்ளது. ரூ.180 கோடி செலவு செய்து தயாரித்துள்ள ஆஸ்கார் ரவிச்சந்திரன், அதைவிட பலமடங்கு லாபம் சம்பாதிப்பார் என பரவலான கருத்து வெளியாகி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.