ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று மும்பை அணிக்கும் ஐதராபாத் அணிக்கும் இடையே நடந்த பரபரப்பான போட்டியில் ஐதராபாத் அணி தோல்வி அடைந்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பின்ச் 68 ரன்கள் எடுத்தார். வார்னர் அதிரடியாக 31 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.
பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 2வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் அவுட் ஆனார். ஆனால் அதன்பின்னர் விளையாடிய சிம்மன்ஸ் மற்றும் ராயுடு ஆகியோர் தலா 68 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் மும்பை அணி 18.5 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராயுடு தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 6 புள்ளிகளை பெற்று 6வது இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் ராஜஸ்தான் மோது ஆட்டம் ராஞ்சியிலும், பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதும் ஆட்டம் பெங்களூரிலும் நடக்கவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.