shadow

1aaமும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி மீண்டும் தனது தோல்வியை பதிவு செய்துள்ளது. ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி இதுவரை ஒருபோட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி வார்னர் மற்றும் ராகுலின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் குவித்தது. வார்னர் 4 சிக்சர்களை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுப்பது போல மும்பை அணியின் போலார்டு 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டர்களுடன் 48 பந்துகளில் 78 ரன்கள் அடித்து ஐதராபாத் பவுலர்களை நொறுக்கினார். ஆனால் அவருக்கு உறுதுணையாக மும்பை அணியின் பேட்ஸ்மேன்களும் கைகொடுக்காததால் 20 ஓவர்களில் மும்பை அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. மும்பை அணியின் 6 பேட்ஸ்மேன்களும் சேர்ந்து வெறும் 15 ரன்கள் மட்டும் எடுத்து தங்கள் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.

நேற்றைய போட்டியில் மிக அபாரமாக பந்துவீசிய பிரவீண்குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply