புயலில் விழுந்த மிகப்பெரிய மரம்: நூலிழையில் உயிர் பிழைத்த பெண். அதிர்ச்சி வீடியோ
நெதர்லாந்து நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட புயலில் மிகப்பெரிய மரம் ஒன்று வேரோடு சாயந்தது. இதில் ஒரு பெண் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்தஒரு பெண் ஒரு சிறிய தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு சாலையில் நடந்து சென்றார். அப்போது அடித்த புயற்காற்றின் காரணமாக மிகப்பெரிய மரம் ஒன்று வேரோடு சாயந்தது. இந்த மரம் அந்த பெண் தள்ளி கொண்டு சென்ற தள்ளுவண்டியின் மிக அருகில் விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் அந்த பெண் சிறிய காயமின்றி உயிர் தப்பினார்.
இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
//www.youtube.com/watch?v=2vcEcZigutI
Leave a Reply
You must be logged in to post a comment.