shadow

விவசாயிகளின் தேவைகளுக்காகவும், அவர்களின் நலன் காக்கவும் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்தத் தொகை மூன்று தவணைகளாக பிரித்து தவணைக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்த முறை வீட்டுக்கே நேரடியாக 2 ஆயிரம் ரூபாயை டெலிவரி செய்வதற்காக இந்திய தபால் துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக ‘ஆப்கா பேங்க், ஆப்கே துவார்’ என்ற திட்டத்தை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.