shadow

தஞ்சை உள்பட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தினத்தில் பொதுவிடுமுறை

1தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் நவம்பர் 19ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவு ஒன்றை தமிழக தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அன்றைய தினம் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டு போடுவதற்கு வசதியாக அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்துக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவை மீறி தனியார் நிறுவனங்கள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply