shadow

கர்நாடக மாநிலத்தை அடுத்து மத்தியபிரதேச மாநிலத்திலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை என கல்லூரியின் முதல்வர் அறிவித்துள்ளார்

ஹிஜாப் உள்பட எந்த விதமான மத அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என அறிவித்துள்ள கல்லூரி முதல்வர், தடையை மீறி மத அடையாளங்களுடன் வந்தால் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்