கூவத்தூர் ரிசார்ட்டில் நுழைந்த அதிரடிப்படையினர். எம்.எல்.ஏக்களுக்கு விடுதலை கிடைக்குமா?
அதிமுக சட்டமன்ற எம்.எல்.எக்கள் 100க்கும் மேற்பட்டோர் அவர்களது விருப்பமின்றி கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து எம்.எல்.ஏ சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலாவும் எடப்பாடி பழனிச்சாமியும் தன்னை அடைத்து வைத்திருந்ததாக அவர் கொடுத்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எம்.எல்.ஏக்களின் உண்மை நிலை என்ன என்பதை அறிய அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளனர் அதிரடிப்படையினர். எம்.எல்.ஏக்களை அவர்கள் மீட்டு வந்தால்தான் உண்மை நிலை தெரியவரும். இன்னும் ஒருசில நிமிடங்களில் எம்.எல்.ஏக்களின் பேட்டிகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.