விஜய் கிராஃப்பில் இந்த படம் ஒரு வைரமகுடம். ‘மெர்சல்’ குறித்து தயாரிப்பாளர்
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று முன் தினம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமா ருக்மணி இந்த படம் குறித்து கூறியதாவது:
இந்த படத்திம் உற்சாகமே இந்த படத்தின் சஸ்பென்ஸ் எதுவும் வெளியாகாமல் யாருக்குமே தெரியாமல் இருப்பதுதான். விஜய் இந்த படத்தில் நடிக்கும் அனைத்துமே வித்தியாசமானது. இந்த ரோல்கள் குறித்து நீங்கள் பலவகையாக யூகித்து கொண்டே இருக்கலாம்.
விஜய்யின் திரையுலக கிராஃபில் இந்த படம் அவருக்கு ஒரு வைரமகுடமாக இருக்கும். தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிப்பது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை’ என்று கூறியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.