சென்னை அண்ணாசாலையில் கொட்டோ கொட்டு என்று கொட்டும் மழை: நாளை விடுமுறையா?

சென்னை அண்ணாசாலை உள்பட சென்னையின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வந்த நிலையில் இன்று மீண்டும் மழை தொடங்கி உள்ளது

சென்னையில் உள்ள அண்ணா சாலை, தி நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை உள்பட பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்த நாட்களில் சென்னையில் இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்யும் என ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் அவர்கள் அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply