கொரோனா பாதிப்பு குறையுமா?

சென்னையில் இன்று அதிகாலை 5 மணி முதல் முக்கிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

கொரோனா வைரஸ் கடுமையான வெயில் அடித்தால் ஒழியும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் கனமழை பெய்தால் குறையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தற்போது சென்னையின் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணாசாலை, தி.நகர், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகம் இருந்ததால் புழுக்கத்தில் இருந்த சென்னை மக்கள் இன்று சிலுசிலு காற்றை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply