shadow

தலைநகர் டெல்லியில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன என்பதால் போக்குவரத்து வாகனங்கள் சிக்கலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதன் காரணமாக பலநூறு வாகனங்கள் கிலோ மீட்டர் கணக்கில் அணிவகுத்து நிற்கின்றன

போக்குவரத்தை சரி செய்ய போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

டெல்லி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்