shadow

மீண்டும் கனமழை; இந்த மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மான்டஸ் புயல் கரையை கடந்த போது கனமழை பெய்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மீண்டும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் ராமநாதபுரம் தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.