shadow

பசுபிக் பெருங்கடல் தீவில் பயங்கர நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

earthquakeஆஸ்திரேலியா நாட்டின் அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டுவில் என்ற தீவில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 என்று பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கியது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தெருக்களுக்கு ஓட்டம் பிடித்தனர்.

பசுபிக் பெருங்கடலுக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் உருவாகி இருந்த இந்த நிலநடுக்கத்தால் வழக்கத்தை விட மிக அதிக உயரமான ராட்சத அலைகள் எழுந்தன, இதனால் வனுவாட்டு, நியூகளிமோனியா, பிஜு ஆகிய நாடுகளுக்கு சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. உடனடியாக அந்த பகுதியின் கடலோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் சற்று முன்னர் பிஜு தலைநகர் சுவா நகருக்கு மட்டும் விடப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது. நிலநடுக்கத்தால் வனுவாட்டு நாட்டில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

Leave a Reply