இப்படியே போய் கொண்டிருந்தால் மூன்றாம் பிறை கமல்ஹாசனை பார்க்கலாம். அமைச்சர் ஜெயகுமார்
கடந்த சில நாட்களாகவே அமைச்சர்களின் ஊழல் குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும் அதற்கு அமைச்சர்கள் பதில் சொல்வதுமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எத்தனை கமல்ஹாசன், எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுக அரசை கவிழ்க்க முடியாது.
நடிகர் கமல்ஹாசன் இப்படியே பேசிக்கொண்டிருப்பது நல்லதல்ல. அவர் இப்படியே பேசிக்கொண்டு போனால் இறுதியில் அவர் நடித்த மூன்றாம் பிறை படத்தின் இறுதிக் கட்ட காட்சியில் வருகின்ற கமல்ஹாசனைப் போல ஆகிவிடுவார், என்று ஜெயக்குமார் கேலி செய்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.