ஒவ்வொரு இந்துவும் 10 பிள்ளைகளை பெற்று கொள்ளுங்கள். வாசுதேவானந்த சரஸ்வதி
ஒவ்வொரு இந்துவும் பத்து குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும். எப்படி வளர்ப்பது என்ற கவலை வேண்டாம். குழந்தைகளை கடவுள் பார்த்துக்கொள்வார் என்று வாசுதேவானந்த சரஸ்வதி கருத்து தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாக்பூரில் நடைபெற்ற தர்ம சான்ஸ்க்ருதி மஹாகும்பா என்ற நிகழ்ச்சியில் வாசுதேவானந்த சரஸ்வதி கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: ஒவ்வொரு இந்து தம்பதியும் 10 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அதிக குழந்தைகளை வளர்க்க முடியாதே என்ற கவலை வேண்டாம். உங்கள் குழந்தைகளை கடவுள் காப்பாற்றுவார். அதே சமயம் இந்து மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பிரதமர் மோடி கருப்புப் பணத்தை ஒழிக்க 500,1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று அதிரடியாக உத்தரவிட்டார். அதே போல இந்துக்கள் கடவுளாக பார்க்கும் பசுவதை தடை செய்ய வேண்டும். இதற்கு அதிரடி சட்டத்தை இயற்ற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.