ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு: மரண தண்டனை உறுதியாகுமா?
சென்னையை அடுத்த போரூரில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்த தஷ்வந்த்துக்கு ஏற்கனவே செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்துள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அந்த தண்டனை உறுதி செய்யப்படுமா? என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும்
ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்துக்கு வழங்கிய தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த தீர்ப்பில் தஷ்வந்துக்கு மரண தண்டனை உறுதி செய்யப்படுமா? அல்லது விடுதலை செய்யப்படுவாரா? என்பது குறித்து இன்னும் சிலமணி நேரங்களில் தெரியவரும்
இன்று ஹாசினி வழக்கின் தீர்ப்பு வெளியாவதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படும் என தெரிகிறது. தஷ்வந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதால் அவரை பாதூகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வர காவல்துறையினர் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.