shadow

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்திய அமெரிக்கா: பெரும் பரபரப்பு

ஏற்கனவே பின்லேடனை பிடிக்க பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம் தற்போது தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த மீண்டும் அந்நாட்டின் எல்லைக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானை தலைமையிடமாக வைத்து இயங்கி வருவதாக கூறப்படும் ஹக்கானி தீவிரவாதிகளை அழிக்க அந்நாட்டிற்குள் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நுழைந்து இன்று தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் ஹக்கானி இயக்கத்தை சேர்ந்த மூத்த தளபதி ஹவாரி உள்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் தீவிரவாதிகளை அழிக்க தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் நுழைய அமெரிக்கா திட்டமிட்டுள்ளதால் பாகிஸ்தானில் ஒருவித பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply